Posts

புலவர் வெற்றியழகன்.

உயர்திணையில் 'கள்' விகுதி.  'அன்', 'ஆன்' ஆண்பால் ஒருமை விகுதிகள். 'அள்', 'ஆள்' பெண்பால் ஒருமை விகுதிகள். 'அர்', 'ஆர்' பன்மை விகுதிகள். 'கள்' என்னும் அஃறிணைப் பன்மை விகுதியை, உயர்தினைக்குப்  பயன்படுத்துதல் கூடாது. புலவன் வந்திருந்தான் என்றெழுதுவதே சரியானது. புலவர் வந்திருந்தார் என்றிதனை மரியாதைப்பன்மையாக, எழுதுவதால், ஒருவர்க்குமேல் வந்தோரைக்குறிப்பிடுவதற்கு 'புலவர்கள் வந்திருந்தார்கள்' என்று 'கள்' விகுதியைச்சேர்த்தெழுதுகின்றனர். 'கள்' விகுதியைச்சேர்க்காமலேயே எழுதலாம். எ-டு: புலவன் வந்தான் - ஒருமை. புலவர் பேசினர் - மரியாதை ஒருமை. ( அர் - பெயர், வினைகளில் உயர்திணைப்பன்மையைக்காட்டும் ஒரு விகுதி; பெயர், வினைகளில் ஒருமைச்சிறப்பில் வரும் ஒரு விகுதி). புலவர் பேசினார் - பன்மை. (ஆர் - உயர்திணைப்பன்மைப்படர்க்கை விகுதி). புலவர்மார் பேசினார் - மரியாதைப்பன்மை. ( மார் - பன்மை விகுதி).  புலவோர் பேசினார் - பன்மை. * ஆதிபகவன் (குறள் - 1) - 'அன்' விகுதி. * நீந்துவர், நீந்தார், இறைவன், அடிசேராதார் (குறள் - 10) -...

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர் திரு. இராச மனோகரன். "விட்டிசைத்தலும் விடாதிசைத்தலும்". தமிழில் தனிச்சொற்கள் எனவும் பிணைப்புச்சொற்கள் எனவும் இருவகையுண்டு. 'வாழை' என்பது ஒரு தனிச்சொல். 'பழம்' என்பதும் அவ்வாறே. ஒரு பழம் இன்ன மரத்தினது என நாம் உணர்ந்தால், மற்றவர்க்கும் அதனையே உணர்த்த விரும்பினால், வாழையென்னும் சிறப்புச்சொல்லும், பழமென்னும் பொதுச்சொல்லும்  பகரமெய்(ப்) பெற்று புணர்ந்து  'வாழைப்பழம்' என்னும் பிணைப்புச்சொல் ஆகும். வாழைப்பழம் வாழைமரத்திற்கேயுரிய பழம் எனவும்,  அல்வாழைமரத்திலும், தண்டு, இலை முதலான சினைகளைக்குறிக்காமல், அதன் பழம் ஒன்றனையே குறிக்கும் எனவும் அறியவேண்டும். வாழைப்பழம் எனும் இப்பிணைப்புச்சொல்லை ஒலிக்கும்போது பிளவுபடாமல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும். இதனையே விடாதிசைத்தல் (விடாது+இசைத்தல்) என்கிறோம். இவ்வாறாக விடாதிசைப்பது மட்டுமன்று, பிளவுபடுத்தாமல் ஒரே சொல்லாகவும் எழுதவேண்டும். ஒலித்தல், எழுதுதல் இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும். இலக்கணநோக்கின்படியும், பொருள்நோக்கின்படியும், ஒலிப்புமுறைப்படியும் ஒரு வல்லொற்றுத்தோன்றினால், அச்சொற்களை விடாதிசைக்கவேண்டும்...

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்ப்புலவர் இராச மனோகரன். கல்லாடக்கவிச்சுவை. பழந்தமிழ் இலக்கியமாம் கல்லாடத்தில், ஓர் அருமையான பாடல். காண்போமா. ஒரு தலைவி, தன்தலைவனுடன் 'உடன்போக்கு' சென்றுவிட்டாள். வளர்த்ததாய் வருந்துகிறாள். அவர்களைத்தேடிப்போகிறாள். எதிர்ப்பட்ட பெரியோரிடம், செய்தியைத்தெரிவித்து "கண்டீர்களா" என வினவுகிறாள். அப்பெரியோர் செவிலித்தாய்க்கு  அறிவுறுத்துவதாக அமைந்தது இப்பாடல். 'உலகியல்புரைத்தல்' என்று தலைப்பிடப்பட்ட இந்நேரிசை ஆசிரியப்பா, ஐம்பத்தைந்து அடிகள் கொண்டது. இதில் ஒன்பது முதல் இருபத்தேழு அடிகள் வரையுள்ள பாடற்பகுதியைக்காண்போம். "செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற 10. செம்மகள் கரியோர்க்கு அறுதி போக மகவின் இன்பம் கடல் சென்றிலவால் அன்றியும் விடிமீன் முளைத்த தரளம் வவ்வினர் இடத்தும் அவ்வழி ஆன திரைக்கடல் குடித்த‌ கரத்த மாமுனிக்கும் 15. திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தர்க்கும் அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப் பெற்று வளர்த்த கல்புடை ஆரம் 20. அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால் உண்டோ சென்றது கண்...

அண்ணாமலையூர்ப்புலவர்

"தலையாய நட்பு". பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழுக்குப்பெருமை சேர்ப்பன. எட்டுத்தொகை நூல்களுளொன்று புறநானூறு. புறப்பொருள் ஒழுகலாறுகளான பொருள், வீரம், ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படுத்தி, மக்களை நெறிப்படுத்தும் பாடல்கள் நானூறு தொகுக்கப்பெற்றதால் 'புறநானூறு' என்னும் பெயர்பெற்றது. இதன்கண் நற்கருத்தமைந்த அணிகலணான பாடலொன்றைச்சுவைப்போம்; கடைபிடிப்போம். பாடலின் பின்னணி வருமாறு: உறையூரை தலைநகரமாகக்கொண்டு கோப்பெருஞ்சோழன் ஆண்டு வந்தான். பாண்டியநாட்டில் 'பிசிராந்தையார்' என்னும் நற்றமிழ்ப்புலவர் வாழ்ந்து வந்தார். இருவரும்  நேரில்காணாமலே நட்புறவு பூண்டிருந்தனர். யாது காரணத்தாலோ, இருவரும் ஒருவரையொருவர் நேர்காண இயலவில்லை. ஆயினும்,  உள்ளத்தால் ஒன்றி நட்பினை வளர்த்து வந்தனர்.  கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்க்கிடையே ஆட்சியுரிமைக்கான பூசல்கள் நேரிட்டன. மன்னன் மனம்வெறுத்து உயிர்நீங்க எண்ணி, வடக்கிருந்தான். தன்னாருயிர் நண்பர் பிசிராந்தையார் தன்னைக்காண வருவார் என்று உறுதிகொண்ட மன்னன், அவர்க்கு தம்மருகில் ஓரிருக்கை அமைத்தான். உள்ளுணர்வு தூண்டப்பெற்ற  பிசிராந்தையார், தன்நண்பனாம் மன்ன...

அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர் புலவர் இராசமனோகரன். "செந்தமிழ்ச்சுவை -  முத்தொள்ளாயிரம்". அறிவார்ந்த ஐயன்மீர். அனைவருக்கும் வணக்கம். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்துபாயுது காதினிலே" என மகாகவி பாரதியார் நமக்குப்பாடிக்காட்டினார். அவர் பாடிக்காட்டியதை நாம் நாடிப்பார்ப்போமா. நாடி பார்ப்பதற்கு, மிகப்பழைய இலக்கியமாய் அமைந்த 'முத்தொள்ளாயிரம்' என்னும் நூலிலிருந்து, முத்தான ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம். மூன்று தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் எனப்பட்டது. சேரமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், சோழமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், பாண்டியமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம் என, ஈராயிரத்துஎழுநூறு அழகிய வெண்பாக்களைக்கொண்ட இந்நூல், நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்நூலாசிரியர் யாரெனத்தெரியவில்லை. கிடைத்த நூற்றுமுப்பது பாடல்களும் நல்லிசைப்புலவோரால் மேற்கோள்களாக காட்டப்பட்டவைகளில் இருந்து தொகுக்கப்பெற்றவை. சோழமன்னன் கிள்ளிக்குப்பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. அதன்பொருட்டு நகரம் தூய்மைப்படுத்தப்பட்டது. அதனை நகைச்சுவை ததும்ப புலவர் உரைக்கிறார். பாடல் வருமாறு: "அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்...

அண்ணாமலையூர்புலவர்

"கலித்தொகைப்பாடல்". அண்ணாமலையூர் புலவர் திரு. இராச மனோகரன். சங்கக்காலத்தில் எழுதப்பட்ட, பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்றாகிய, "கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில்" ஒரு சோற்றுப்பதமாக ஓர் இன்சுவைப்பாடலைச் சுவைப்போமா! அந்துவனார் என்னும் புலவர் இயற்றிய, நெய்தல்திணையில் தோழியின்கூற்றாக அமைந்த இப்பாடலில் அறக்கருத்துகள் செறிந்துள்ளன. மக்கள்வாழ்க்கைக்கு வேண்டிய நல்லறங்களை எடுத்தோதுவதால் இவர் "நல்லந்துவனார்" என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்பட்டார். பத்தொன்பது அடிகளைக்கொண்ட இப்பாடலின், முதலைந்து அடிகள் தலைவனின் சிறப்பை உரைக்கின்றன. அடுத்த ஒன்பதடிகள் அறக்கூற்றின் வாயிலாக தலைவியுற்ற துயரை உரைக்கின்றன. இறுதி ஐந்தடிகள், தலைவியின் துயர்தீர்க்க தலைவனை விரைந்து செல்கவென வேண்டுகின்றன.  நாம் அறப்பகுதியையும் வேண்டல்பகுதியையும் காண்போம். "மாமலர் முண்டகம் ...... ................................................................. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செ...

இராம்முருகன்

'தமிழ்நதி'  திரு. இராம்முருகன், தமிழாசிரியர்.   ‌‌ "தமிழில் புணர்ச்சி". தமிழுக்கே உரியது புணர்ச்சி. புணர்ச்சியின் சிறப்பை, இன்றியமையாமையை ஒரு குறள்வழி அறிவோமா. வான்சிறப்பு, குறள் எண் - 17. சொல்பகுக்காத, புணர்ச்சியுடன் அமைந்தது. "நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்".  சொல்பகுக்கப்பட்டபின், "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்". இக்குறளில், தடிந்து, எழிலி ஆகிய இருசொல்தான் இலக்கியவழக்கு உடையன. ஏனையவை நம் பேச்சுவழக்கில் உள்ளவை. தடிந்து = மறுத்து, விலக்கி, குறைத்து. எழிலி = மேகம். இக்குறளில் என்னென்ன புணர்ச்சிவிதிகள் பயன்படுத்தப்பட்டால், இது செய்யுள்வடிவம் பெற்று சிறந்தது என்பதனை விளக்கமாக காண்போம். செய்யுளில் சொல்களை, 'சீர்கள்' என்பர். இரண்டிற்கும் வேறுபாடு என்ன. சொல் தன்னளவில் முழுமைபெற்று பொருள்தரும். சீர் தனக்கு முன்னும் பின்னும் உள்ள சீர்களுடன் பொருந்தி பொருள்தரும். இச்செய்யுளில் சீர்களின் புணர்ச்சியில் செயல்பட்ட, புணர்ச்சிவிதிகளை முதலில் காண்போம். 1. நெடுங்கடலும் + தன்னீர்மை = நெட...