புலவர் வெற்றியழகன்.
உயர்திணையில் 'கள்' விகுதி. 'அன்', 'ஆன்' ஆண்பால் ஒருமை விகுதிகள். 'அள்', 'ஆள்' பெண்பால் ஒருமை விகுதிகள். 'அர்', 'ஆர்' பன்மை விகுதிகள். 'கள்' என்னும் அஃறிணைப் பன்மை விகுதியை, உயர்தினைக்குப் பயன்படுத்துதல் கூடாது. புலவன் வந்திருந்தான் என்றெழுதுவதே சரியானது. புலவர் வந்திருந்தார் என்றிதனை மரியாதைப்பன்மையாக, எழுதுவதால், ஒருவர்க்குமேல் வந்தோரைக்குறிப்பிடுவதற்கு 'புலவர்கள் வந்திருந்தார்கள்' என்று 'கள்' விகுதியைச்சேர்த்தெழுதுகின்றனர். 'கள்' விகுதியைச்சேர்க்காமலேயே எழுதலாம். எ-டு: புலவன் வந்தான் - ஒருமை. புலவர் பேசினர் - மரியாதை ஒருமை. ( அர் - பெயர், வினைகளில் உயர்திணைப்பன்மையைக்காட்டும் ஒரு விகுதி; பெயர், வினைகளில் ஒருமைச்சிறப்பில் வரும் ஒரு விகுதி). புலவர் பேசினார் - பன்மை. (ஆர் - உயர்திணைப்பன்மைப்படர்க்கை விகுதி). புலவர்மார் பேசினார் - மரியாதைப்பன்மை. ( மார் - பன்மை விகுதி). புலவோர் பேசினார் - பன்மை. * ஆதிபகவன் (குறள் - 1) - 'அன்' விகுதி. * நீந்துவர், நீந்தார், இறைவன், அடிசேராதார் (குறள் - 10) -...