Posts

தமிழ்ப்பாடநூல்களில் புணர்ச்சியிலக்கணம் (3-ஆம் பதிவு).

தமிழ்ப்பாடநூல்களில் புணர்ச்சியிலக்கணம் (3-ஆம் பதிவு). +2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில்  149ஆம் பக்கத்திலுள்ள, "நாம் அணியும் உடை, உணவு, அரசியல் என எல்லாவற்றையுமே இன்று திரைப்படம்தான் தீர்மானிக்கிறது" என்ற  தொடரைக்காண்போம். . 'என' என்பது இடைச்சொல்லாகும்.  இடைச்சொற்கள் தனித்து இயங்கா;  பெயர், வினைச்சொற்களை இடனாக கொண்டு இயங்குமென்பது இலக்கணம்.  என, என்று, ஓடு என்னும் இம்மூன்று இடைச்சொற்களும் எண்ணப்படும் பொருள்தோறும் நிற்கும். சிலநேரங்களில் ஓரிடத்தில் நிலைத்துநின்று எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தும்.  எனவே 'என' என்னும் இடைச்சொல், 'அரசியல்' என்னும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து 'அரசியலென' என்றாகும். அரசியல் என்னும் பெயர்ச்சொல்லின் ஈற்றில்நின்ற‌  இடைச்சொல், அதற்கு முன்னுள்ள உடை, உணவு ஆகிய பெயர்ச்சொற்களுடனும் சென்று பொருந்தி உடையென, உணவென என்று பொருள்படும்.   இடைச்சொல் தனித்து இயங்காத என்பதை ஏன் மறந்தனர்.  நன்றி. வணக்கம்.

தமிழ்ப்பாடநூலில் புணர்ச்சியிலக்கணம். (2-ஆம் பதிவு).

புணர்ச்சியிலக்கணம்.  +2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் காணப்படும் பிழை.   பாடநூலின் 206ஆம் பக்கத்தில் பின்வரும் தொடர் உள்ளது.  "கலவரம் மேலிடக் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்தியதில் சற்றே அடங்கியிருந்த அது மீண்டும் ஈனஸ்வரத்தில் முனகத் தொடங்கியது."  ‘கலவரம் மேலிடக் குழந்தையை’ என்னும் சொற்றொடரில் இரண்டாஞ்சொல்லின் ஈற்றில் ககரமெய் மிகுந்ததால் அது வருமொழியுடன் புணர்ந்ததை அறியலாம்.  ‘மேலிட’ என்பது கலவரம் என்னும் சொல்லுடன் உறவுள்ளது. ‘கலவரம் அதிகரிக்க’ என்பது சொல்லவரும் கருத்து. ‘மேலிடம்’ என்னும் மகரயீற்றுச்சொல்லை ‘குழந்தை’ ‌என்னும் பெயருடன் புணர்த்த மகரமெய் நீங்கி வருமொழியின் ககரமெய் மிகுந்தது. ‘மேலிடக்குழந்தை’ என்பது பொருளை வேறுதிசைக்குக்கொண்டு செல்கின்றதன்றோ. எனவே இது பொருளற்ற வன்புணர்ச்சியென்பதை ஏன் மறந்தனர்.  ‘ஈனஸ்வரத்தில்’ என்னுஞ்சொல்லில் வடவெழுத்து ஏன் இடம்பெற்றது. தமிழ்ப்பாடநூலில் வடவெழுத்து இடம்பெறலாகாதென்னும் உணர்ச்சி ஏன் இல்லை.  ‘முனகத்தொடங்கியது’  என்பது ஒருபொருள்குறித்த சொற்றொடர். இதனை இருசொல்லாக பிரிக்க வேண்டா. இடைவெளியின்றி ஒருசொல்லா...

தமிழ்ப்பாடநூலில் புணர்ச்சியிலக்கணம். (1-ஆம் பதிவு).

புணர்ச்சியிலக்கணம். +2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் காணப்படும் இலக்கணப்பிழை.  பாடநூலின் 10ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு தொடர் (வாக்கியம்) வருமாறு: "எனதருமைத் தம்பியாகிய திரு நெல்லையப்பரைப் பராசக்தி நன்கு காத்திடுக." இத்தொடரிலுள்ள பிழைகளைக்காண்போம்.  ‘எனதருமைத் தம்பியாகிய’ என்னும் சொற்றொடரிலுள்ள முதல்சொல் தகரமெய்(த்) பெற்று அதனையடுத்து இடைவெளியையும் (space) பெற்றுள்ளது. உரைநடையில் ‌ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ தம்முள் இடைவெளியின்றி பொருள்பட சேர்ந்து தமக்கு முன்பின் இடைவெளியைப்பெற்றால் ‘சொல்’ எனப்படும்.  தமிழ்சொற்கள் எதற்கும் வல்லினமெய்கள் ஈறாகா. இந்த அடிப்படைவிதியை ஏன் மறந்தனர்? 'நெல்லையப்பரைப்  பராசக்தி' என்னும் சொற்றொடரிலுள்ள முதல்சொல் செயப்படுபொருள் வேற்றுமையான இரண்டாம்வேற்றுமையின் ‘ஐ’ உருபை ஏற்றுள்ளது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்; பெயருடன் புணராது. நன்னூற்சூத்திரம் - 319 இதனை தெளிவாக வரையறுக்கிறது.  'நெல்லையப்பரைப்பராசக்தி' என்பது ‘வாழைப்பழம்’ போன்ற‌ பெயர்+பெயர் கூட்டன்று. இந்த அடிப்படைவிதியை ஏன் மறந்தனர்?   நன்னூல் சூத்...

திருவள்ளுவர் உள்ளம்.

அமிழ்தம். திருவள்ளுவர் தமதுநூலில்  "அமிழ்தம்" என்னும் சொல்லை ஆண்டுள்ள குறள்களையும், அவற்றின் சிறப்புகளையும் ஆய்வதே இப்பதிவின் நோக்கம். அதிகாரம் - 2. வான் சிறப்பு. குறள் எண் - 11. "வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று". தேவநேயப்பாவாணர் இக்குறளுக்கு வழங்கிய ஆய்வுரை வருமாறு:-  "மழை உலகிற்குச் சாவா மருந்து எனக்கருதப்பெறும் தன்மையது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும் நீரும், தொடர்ந்த பசி, தகை (தகை = தாகம்) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தால், 'இருமருந்து' எனப்படும். நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று.  ஆயினும், பிணி மூப்பு சாக்காடு ஆகியன இருத்ததால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கியவரை சாவினின்று தப்பினானென்று கூறும் வழக்கைக்காண்க. அமிழ்தம் என்னுஞ்சொல், சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ்- அவிழ்து- அவிழ்தம்-அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம்" (மணி. 28:16). அவிழ்து-அ...

புலவர் வெற்றியழகன்.

உயர்திணையில் 'கள்' விகுதி.  'அன்', 'ஆன்' ஆண்பால் ஒருமை விகுதிகள். 'அள்', 'ஆள்' பெண்பால் ஒருமை விகுதிகள். 'அர்', 'ஆர்' பன்மை விகுதிகள். 'கள்' என்னும் அஃறிணைப் பன்மை விகுதியை, உயர்தினைக்குப்  பயன்படுத்துதல் கூடாது. புலவன் வந்திருந்தான் என்றெழுதுவதே சரியானது. புலவர் வந்திருந்தார் என்றிதனை மரியாதைப்பன்மையாக, எழுதுவதால், ஒருவர்க்குமேல் வந்தோரைக்குறிப்பிடுவதற்கு 'புலவர்கள் வந்திருந்தார்கள்' என்று 'கள்' விகுதியைச்சேர்த்தெழுதுகின்றனர். 'கள்' விகுதியைச்சேர்க்காமலேயே எழுதலாம். எ-டு: புலவன் வந்தான் - ஒருமை. புலவர் பேசினர் - மரியாதை ஒருமை. ( அர் - பெயர், வினைகளில் உயர்திணைப்பன்மையைக்காட்டும் ஒரு விகுதி; பெயர், வினைகளில் ஒருமைச்சிறப்பில் வரும் ஒரு விகுதி). புலவர் பேசினார் - பன்மை. (ஆர் - உயர்திணைப்பன்மைப்படர்க்கை விகுதி). புலவர்மார் பேசினார் - மரியாதைப்பன்மை. ( மார் - பன்மை விகுதி).  புலவோர் பேசினார் - பன்மை. * ஆதிபகவன் (குறள் - 1) - 'அன்' விகுதி. * நீந்துவர், நீந்தார், இறைவன், அடிசேராதார் (குறள் - 10) -...

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர் திரு. இராச மனோகரன். "விட்டிசைத்தலும் விடாதிசைத்தலும்". தமிழில் தனிச்சொற்கள் எனவும் பிணைப்புச்சொற்கள் எனவும் இருவகையுண்டு. 'வாழை' என்பது ஒரு தனிச்சொல். 'பழம்' என்பதும் அவ்வாறே. ஒரு பழம் இன்ன மரத்தினது என நாம் உணர்ந்தால், மற்றவர்க்கும் அதனையே உணர்த்த விரும்பினால், வாழையென்னும் சிறப்புச்சொல்லும், பழமென்னும் பொதுச்சொல்லும்  பகரமெய்(ப்) பெற்று புணர்ந்து  'வாழைப்பழம்' என்னும் பிணைப்புச்சொல் ஆகும். வாழைப்பழம் வாழைமரத்திற்கேயுரிய பழம் எனவும்,  அல்வாழைமரத்திலும், தண்டு, இலை முதலான சினைகளைக்குறிக்காமல், அதன் பழம் ஒன்றனையே குறிக்கும் எனவும் அறியவேண்டும். வாழைப்பழம் எனும் இப்பிணைப்புச்சொல்லை ஒலிக்கும்போது பிளவுபடாமல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும். இதனையே விடாதிசைத்தல் (விடாது+இசைத்தல்) என்கிறோம். இவ்வாறாக விடாதிசைப்பது மட்டுமன்று, பிளவுபடுத்தாமல் ஒரே சொல்லாகவும் எழுதவேண்டும். ஒலித்தல், எழுதுதல் இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும். இலக்கணநோக்கின்படியும், பொருள்நோக்கின்படியும், ஒலிப்புமுறைப்படியும் ஒரு வல்லொற்றுத்தோன்றினால், அச்சொற்களை விடாதிசைக்கவேண்டும்...

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்ப்புலவர் இராச மனோகரன். கல்லாடக்கவிச்சுவை. பழந்தமிழ் இலக்கியமாம் கல்லாடத்தில், ஓர் அருமையான பாடல். காண்போமா. ஒரு தலைவி, தன்தலைவனுடன் 'உடன்போக்கு' சென்றுவிட்டாள். வளர்த்ததாய் வருந்துகிறாள். அவர்களைத்தேடிப்போகிறாள். எதிர்ப்பட்ட பெரியோரிடம், செய்தியைத்தெரிவித்து "கண்டீர்களா" என வினவுகிறாள். அப்பெரியோர் செவிலித்தாய்க்கு  அறிவுறுத்துவதாக அமைந்தது இப்பாடல். 'உலகியல்புரைத்தல்' என்று தலைப்பிடப்பட்ட இந்நேரிசை ஆசிரியப்பா, ஐம்பத்தைந்து அடிகள் கொண்டது. இதில் ஒன்பது முதல் இருபத்தேழு அடிகள் வரையுள்ள பாடற்பகுதியைக்காண்போம். "செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற 10. செம்மகள் கரியோர்க்கு அறுதி போக மகவின் இன்பம் கடல் சென்றிலவால் அன்றியும் விடிமீன் முளைத்த தரளம் வவ்வினர் இடத்தும் அவ்வழி ஆன திரைக்கடல் குடித்த‌ கரத்த மாமுனிக்கும் 15. திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தர்க்கும் அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப் பெற்று வளர்த்த கல்புடை ஆரம் 20. அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால் உண்டோ சென்றது கண்...